இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படமும் இலங்கை முஸ்லிம்களும்.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படமும் இலங்கை முஸ்லிம்களும்.

எமது உயிரிலும் மேலான கண்மணி ரசூளுல்லாஹ்வை கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக முழு உலகிலும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இந்தப் போராட்டங்களில் எமது இறுதித் தூதரின் மீது கொண்ட தூய அன்பினால் உயிரிழந்த சகோதர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இஸ்லாமிய எதிர் சக்திகள் முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் அவ்வப்போது கை வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி விட்டு அதில் பிரபலம் அடைவதற்கு முயற்சித்து வருகின்றன. எனினும் மறுபுறத்தில் இவ்வாறான நிகழ்வுகளினால் மாற்று கொள்கையாளர்களுக்கு மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தேடல் அதிகரித்தும் வருகின்றது.

எமது நாட்டிலும் இஸ்லாமிய விரோத சக்திகள் சிங்கள மொழி மூலமான சுமார் 11 இனைய தளங்களின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

நமது நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நிறுவன மயப்படுத்தப்பட்ட நிலையில் மிகவும் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். நமது வரலாற்றிலும் இது போன்ற பல சூழ்சிகளை நாம் சந்தித்திருக்கின்றோம். சகோதர பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தில் உள்ள சில குழுக்களால் முஸ்லிம்கள் என்பதற்காகவே நாம் தாக்கப்பட்டுள்ளோம். பள்ளிவாசல்களில் வைத்து எமது சகோதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்கள் கடந்தும் நமது பூர்வீக பூமியை துறந்து வாழும் நிலை இன்னும் தொடர்கின்றது. ஒருசில கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் அவ்வப்போது எமது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டிருக்கிறது, எமது மத சம்பிரதாயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் போது எமது உரிமைகளை கோரி பாதையில் இறங்குகிறோம், அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

எமது நாட்டிலும் சர்ச்சைக்குரிய திரைப்படத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றும் நடாத்துவதற்கான முஸ்தீபுகளும் எடுக்கப்பட்டும் வருகின்றது. எமது ஈமானிய உணர்வுகளை வெளிப்படுத்தி எமது எதிர்பினை வெளிப்படுத்துவது முஸ்லிம்கள் மீதுள்ள சன்மார்க்க கடமையாகும்.

அத்துடன், இஸ்லாம் பற்றிய தெளிவை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கக் கூடிய ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இப்தார் நிகழ்வுகள், பெருநாள் சந்திப்புக்கள் என கடந்த காலங்களில் மாற்று மத சகோதரர்களுடனான உறவு வலுப் பெற்று வருகின்றமை பாராட்டத்தக்க அம்சமாகும்.

எனினும், பரம்பரைச் சொத்தாக நாம் பெற்றுக் கொண்ட, மனித வாழ்க்கைக்கு சுபிட்சத்தை ஏற்படுத்த வந்த, இறை வழிகாட்டலின் சுவையை உணராது வழிகாட்டலில் வறுமையோடு வாழுகின்ற எமது கொள்கையில் அயலவர்களுக்கு வாழ்வின் நிம்மதிக்கான தீர்வை நாம் எப்பொழுது வழங்கப் போகிறோம் என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் எமக்கு மத்தியில் சர்சைப்பட்டு மார்க்கம் அனுமத்தித்த கருத்து வேறுபாடுகளில் எமது பக்க நியாயங்கள் வெல்வதற்காக பரஸ்பரம் உழைத்து நேரம் செலவழித்தது போதும். உலகம் அழியும் வரையிலும் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனை விடுத்து, அனைத்து தரப்பினரும் முஸ்லிம் சமூகத்துக்கு வெளியே வந்து கொள்கை வறுமையில் வாடுகின்ற சகோதர சமூகத்துக்கு இறைவழி காட்டலை கொண்டுசேர்க்கும் பணியில் உழைப்பதே எமக்கு முன்னால் பணியாகும்.

 tothanks lankamuslim.org
 சமுக கதாநாயகர்- தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி

சமுக கதாநாயகர்- தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி

Add caption
 தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி. 32 வயதான இவர் எமன் தேசத்தை சார்ந்தவர். அவர் அந்நாட்டின் புரட்சி தாய் என்றும் இரும்பு பெண்மணி என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
இவரிடம் ஒரு பத்திரிகையாளர் அவரது ஹிஜாப் பற்றிக் கேட்டார். அவர் கேட்டார் உங்களது அறிவுக்கும், படிப்புக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாமல் உங்களது ஆடை உள்ளதே என்று. தவக்குல் கர்மானின் அழகான, அறிவான பதிலை கேளுங்கள்..தவக்குல் கூறினார்,
ஒரு காலத்தில் மனிதர் முழு நிர்வாணமாக இந்த உலகில் வாழ்ந்தான். அவனுக்கு எப்போது அறிவாற்றல் வளர ஆரம்பித்ததோ அப்போது அவன் தனது வெட்கத்தலங்களை மறைக்க ஆரம்பித்தான். நான் அணிந்திருக்கும் ஆடை மனிதனின் நாகரிக்கத்தை, உயர்ந்த அறிவாற்றலை காண்பிக்கிறது என்றார். இது பின்னோக்கிச் செல்வதல்ல என்றும் கூறினார். ஆடைகளை குறைப்பதென்பது மீண்டும் பழைய, நாகரீகமடையாத உலகை நோக்கி பின்னோக்கி செல்வது என்றும் கூறினார்.

என்னவொரு அழகான, அறிவான, ஆணித்தரமான, சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் இவை.

இன்று நமது கலாச்சாரம் அந்த முந்திய உலகை நோக்கி செல்கிறது. இஸ்லாமிய சமுதாயமும் க  லாச்சார சீரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஹிஜாபை பேணி நடக்க வேண்டிய நமது சமுதாயம் கொஞ்சம், கொஞ்சமாக கற்கால மனிதர்கள் போல ஆடை குறிப்பில் செல்கிறது. சிறிய வயது முதலே ஹிஜாபை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்கள், சிறிய வயதிலேயே ஹிஜாபை நடைமுறைப் படுத்த வேண்டிய பெற்றோர்கள் சிறியவள்தானே, இப்போதுதானே இது போன்ற ஆடைகளை அணியமுடியும் என்று கூறி தொடை தெரியும் படியும், கைமுழுவது தெரியும் படியும் FASHION என்ற பெயரில் பெண்குழந்தைகளை வளர்த்து வருகிறது. பள்ளிச் சீருடைகளும் பள்ளிக்கு கட்டுப்பட்டு, தலையை மறைக்காமல், முட்டளளவு ஆடை உடுத்தி, ஆண்களுடன் CO-EDUCATIONசெல்லும் நிலையில்தான் நமது சமுதாயத்தில் பெரும்பாலோர்களின் நிலை உள்ளது.

இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.

‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)

‘வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது’ என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)

‘வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்’ என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)

இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.

உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-

இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, நம்மையும் நம் குடும்பத்தாரையும் சுவர்க்கத்தில் புகுத்துவானாக.
துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்

துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்


துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின் மொழிப்பெயர்ப்புகள், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஜசக்கல்லாஹ் ஹைர ....
http://www.thoothuonline.com/1500-people-accept-islam-in-dubai/

Popular Posts

Popular Posts