தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள்

பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
எகிப்தில் இருக்கும் ஒரு ஷரீஆ கல்லூரியில் கல்வி பயின்று வரும் பர்மாவைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் பர்மாவில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகின்றது.

“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில் பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம் குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும், அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன. குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன் கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள், இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

 

 

முஸ்லிம்களே! உஷார்


முஸ்லிம்களே!உஷார்! போலிக்குர்ஆன்!


குர்ஆனுக்கெதிராக சூழ்ச்சிகள்.
இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கைகளையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்தே வந்துள்ளன.

நபி பெரமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர். இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே அது மிகவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் குறையவே இல்லை.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!
முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர்.அதற்காக,
ஷீஆயிஸம்,காதியானியிஸம்,சூபித்துவம்,தரீக்காயிஸம் போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாமற் போயிற்று.


பல இலட்சம் பிரதிகள்!
குர்ஆனிலுள்ள யூதர்களுக்கெதிரான வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும்,ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர். கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவிமக்கள் யாது செய்வதென அறியாது திகைத்தனர்.
இந்தோனேசியாவில் ”மேடான்” என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘ பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காக வுமிருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தின.

அமெரிக்கப் போலிக் குர்ஆன்
யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற்கெதிராக பல்வேறு புத்தகங்களையும், இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற போலி முஸ்லிம்களை வைத்து பல நூல்களையும் கதைகளையும் எழுதினர்.


எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப்பிடிப்புமிக்க முஸ்லிம்களை எந்த வகையிலும் அசைக்க முடியவில்லை. நாடகம் தொடர்ந்தது! தங்கள் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியது போன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!


போலிக்குர்ஆன்!


பெயர் : ” The True Furqan” (உண்மைக் குர்ஆன்)
ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் கண்டுபிடித்து அதை வெளியிட்டுள்ள இரு புத்தக வெளியீட்டாளர்கள் பெயர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘ஒமேகா-2001, ஓய்ன் பதிப்பகம்’ ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தான் இந்த கைங்கரியத்தை அரங் கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல ‘ இது 21-வது நூற்றாண்டின் தலை சிறந்த குர்ஆன்’ எனவும் விமர்சனம் செய்துள்ளது.

366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார் ஆங்கில பாடசாலைகளில் வினியோகமும் செய்துள்ளனர்.

இந்நூலில் 77அத்தியாயங்களே உள்ளன.அதில் பாத்திஹாவுடன் அல்ஜனா, இஞ்சீல் என இரு புதிய அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன.

அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் கொள்கையைக் குறிக்கும் (Trinity-திரீத்துவம்) ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.
நச்சுக்கருத்துகளை திணித்துள்ளனர்.


அது மட்டுமல்ல, அதில்

1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது.(அதாவது பலதாரமணம் கூடாது)

2 . விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.

3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
 
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.மேலும்,

அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு

கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.

இதோ அந்த உத்தரவாதம்

உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

َّ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ


நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (الحجر: ٩அல்ஹுஜர் 15:09)


يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُون

الصف: ٨)
நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப் 61:08)

முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!


இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொது மறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்தில் கைக்கெட்டா விட்டத்தில் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.

அடுத்து படியுங்கள்! குர்ஆன் உலகுக்கே ஒரு சவால்……




‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா?

‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா?



சுபஹ் குனூத்

மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி
- அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
to thank islamkalvi.comபுகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் தீர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டும் ‘சுபஹ் குனூத் ஓர் ஆய்வு’ என்ற இத்தொடரில் விரிவானதோர் ஆய்வை சமர்ப்பித்துள்ளோம்.
இதனை சாதாரண பிரச்சினை என அலட்சியம் செய்யும் இஸ்லாமிய இயக்க காவலாளிகளும், நவீன அழைப்பாளர்களும் இதுபோன்ற மார்க்க அம்சங்களுக்கான சரியான தீர்வை முன்வைக்காது, தம்மை ஒதுக்கிக் கொள்வதால் சாதாரண இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் முரண்பாட்டை நீக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை என எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளையும், வேற்றுமையையும் தோற்றுவித்துள்ள ‘சுபஹ் குனூத்’திற்கான சரியான தீர்வு இஸ்லாமிய அழைப்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் அருளால் சமுதாய ஐக்கியம் பேணப்படுவதுடன், அதனால் தோன்றும் குழப்பங்களும் அகன்று, சமூக மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆய்வின் அடிப்படையில் தரப்பட்டுள்ள தீர்வை சீர்திருத்தவாதிகள் கருத்தில் கொண்டால் அந்தப் பெருமக்களின் சமுதாய அக்கறையை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில் இதுபோன்ற பிரச்சினைகள் நம்போன்றோருக்கு வேண்டுமானால் புதிதாகவும், சிறியதாகவும், சில்லறையாகவும் காட்சியளிக்கலாம். ஆனால் நபித்தோழர்கள், அவர்களின் வழிவந்த இமாம்கள் மத்தியில் பெரிதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
இது பற்றிய முழுவிபரங்களையும் ஹதீஸ் நூற்களிலும், இது தொடர்பான இமாம்களின் மறுப்புக்களில் இருந்தும் அறியலாம். அவர்களின் வழிமுறைகளைத் தழுவி நாமும் இந்த ஆய்வை முன்வைத்துள்ளோம். நடுநிலையுடன் அதனை அணுகும்படி இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக் கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்யப் போதுமானவன்.
இப்படிக்கு
எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி)
மொபைல்:-0094773730852
சுபஹ் குனூத்
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், கருணையும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர், தோழர், இமாம்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க அம்சங்கள் பலதில் பல முரண்பாடுகள் தோன்றியும், அதற்கான சரியான தீர்வை அத்துறை சார்ந்த ஆலிம்களால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழியில் முன்வைக்கப்படுவதற்கு பதிலாக அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின், அல்லது ஊர்வழமையின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதால் முரண்பாடுகள் தொடருகிறதே தவிர அவை தீர்ந்ததாக இல்லை.
அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஆய்வு செய்து அதன் சட்டங்களை அகழ்ந்தெடுத்து தீர்வு சொல்வதே இமாம்களின் பணியாக இருந்துள்ளது என பிரச்சாரம் செய்யும் மத்ஹப் சார்ந்த மௌலவிகளால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழி நின்று மார்க்கப் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் திறமை இல்லாத காரணத்தாலும், அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் சரியான தீப்புக்களை ஏற்று, அமுல் செய்யும் மனோபக்குவம் இல்லாமையினாலும், தாம் படித்த ஓரிரு நூல்களை முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் தீர்ப்புக்கள் சரியானவையா? பிழையானவையா? என்ற எந்தவிதமான ஆய்வுமின்றி முன்வைப்பதாலும் தீர்ப்புக்கள் குழப்பமாகவும், குதர்க்கமாகவும் தரப்படுவதை அவதானிக்க முடிகிறது.
‘சுபஹ்குனூத்’ விஷயத்திலும் இவர்களின் நிலைப்பாடும் இதுவே. எனவேதான் அதன் உண்மை நிலை பற்றி நமது இத்தொடரில் ஆய்வு செய்ய இருக்கிறோம். நான் ‘ஷாபிஈ மத்ஹப்’ சார்ந்தவனாக இருப்பதால் அதைப்பற்றி நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? எனது ஊரில் உள்ளவர்கள் எப்படி நடக்கிறார்களோ, எனது மௌலவிகள் என்ன போதித்தார்களோ அவ்வாறுதான் நானும் நடப்பேன் என்பது போன்ற அலட்சியமான சிந்தனைகளை விட்டுவிட்டு ‘சுபஹ்குனூத்’ பற்றி என்னதான் எடுத்தெழுதப்படுகின்றது என்பதைக் கொஞ்சம் சிந்தித்து, பின்னர் முடிவு செய்யும்படி உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
நவீன காலத்தில் மார்க்கத்தின் பெயரால் எழுந்துள்ள பல பிரச்சனைகள் ஒரு தலைப்பட்சமாக நோக்கப்படுவதால் இஸ்லாத்தின் தூய்மையான கருத்தை சில நேரம் நம்மை அறியாமலே நாம் புறம் தள்ளுகின்றோம். எனவே கருத்து யாரிடம் இருந்து வந்தாலும் நமக்கு முரணானது என்று பார்ப்பதை விடுத்து, அது இஸ்லாமிய மாக்கத்தின் தூய்மையைக் காப்பதாக இருந்தால் அதற்கு நான் துணை நிற்பேன் என்ற நல்லெண்ணத்துடன் வாழ்வதே ஒரு முஸ்லிமின் உயரிய பண்பாகும்.
மொழி வழக்கில் குனூத் :-
மொழி அடிப்படையில் ‘குனூத்’ என்ற சொல் வழிப்படுதல், நின்று வணங்குதல், இறையச்சம், தொழுகையில் -பேசாது- மௌனம்காத்தல், தொழுகை, பிரார்த்தனை போன்ற பல விரிவான பொருளைத் தரும் சொல்லாக அல்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் ஆளப்பட்டிருப்பட்டிருப்பதை பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்.
இந்த அடிப்படையில் அல்குர்ஆனில் إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ النحل120 ‘நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட சமுதாயமாகத் திகழ்ந்தார் என்றும்,
أَمْ مَنْ هُوَ قَانِتٌ آَنَاءَ اللَّيْلِ الزمر9 இரவெல்லாம் நின்று வணங்குபவனுக்கு (சமமாவானா?) என்றும்
وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا الأحزاب31 (நபியின் மனைவியரே)! உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ என்றும்.
يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ آل عمران43 ‘மர்யமே! உனது இரட்சகனுக்கு பணிந்து நடப்பாயாக! என்றும் وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ البقرة 238 (மௌனமாக) பணிந்தவர்களாக அல்லாஹ்வை நின்று வணங்குங்கள்’ என்றும் திருமறை குர்ஆனிலும்
أفضل الصلاة طول القنوت ‘தொழுகையில் சிறந்தது நீண்ட நிலைகளையுடைய தொழுகையாகும்’ (முஸ்லிம்) என்றும், مثل المجاهد في سبيل الله كمثل القانت الصائم ‘இறைபாதையில் போரிடும் போராளிக்கு உதாரணம் இரவில் தொழுது பகல் காலங்களில் நோன்பு நோற்று, நின்று வணங்குபவனுக்கும் உரிய உதாரணம் போன்றதாகும். (புகாரி) என்றும் இடம் பெறும் சொற்பிரயோகங்களை அவதானித்தால் ‘குனூத்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த கிளைச்சொற்களில் பல பொருட்கள் ஆளப்பட்டிருப்பதை அறியலாம்.
(ஆதார நூல்: இமாம் சைலயீ (ரஹ்) அவர்களின் நஸபுர்ராயா. பாகம்: 02- பக்கம்: 132 -ஐ பார்க்கவும்). மேலதிக விளக்கங்களுக்கு பத்ஹுல்பாரி ஹதீஸ் இலக்கம் 1004ன் விளக்கம். ‘லிஸானுல் அரப். பாகம்: 02- பக்கம்: 73 ‘முக்தாறுஸ்ஸிஹாஹ் பாகம்: 1-பக்கம்: 230 ஆகிய நூல்களைப் பார்வையிடவும்.

Popular Posts

Popular Posts