கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை
அல்குர் ஆனின் வழியில் அறிவியல்………….
அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள். “ அல்குர் ஆன் -16:5
மேலும் வேறொரு வசனத்தில்,
“(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம், (வெள்ளாட்டின்) முடி,ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான்.அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன.” –அல்குர்ஆன் -16:80