வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன்

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகம்.

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்ளியலான புனித அல்குர்ஆன் பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.கன்ஸடியால் கடந்த 12வருடங்களில் ஒவ்வொருவருடமும் புனித அல்குர்ஆனின் வெவ்வெறுபட்ட பிரதிகள் உருவாக்கப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இப் புனித அல்குர்ஆன் வெள்ளி மற்றும் பிளட்டினம் முலாம் பூசப்பட்ட தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது 6கிலோகிராம் எடையைக் கொண்டதாகும்.மேலும் இத்தாள்கள் 21 சென்றிமீற்றர் நீளத்தையும், 15சென்றிமீற்றர் அகலத்தையும் கொண்டதுடன்,20கரட் வைரம்,10கரட் ரூபி மற்றும் நீலமாணிக்கம் அடங்களாக 2500 மாணிக்கக்கற்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. 

 இப் புனித குர்ஆனை உருவாக்குவதற்கு 10மாதங்கள் சென்றுள்ளதுடன்,இதன் உருவாக்கத்திற்கு 150,000திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. சித்திரக்கலை பற்றிய ஏதெனும் முறையான பயிற்சி கன்ஸடி பெறவில்லை, எனினும் சிறுவயலிருந்தே சித்திரக்கலை ஆற்றல் அவரிடம் காணப்பட்டுள்ளது.சாதாரண வெற்றுக் கண்னுக்கு புலப்படும் எழுத்துக்களின் 20மடங்கான சிறியஅளவான எழுத்துக்களை எழுத மற்றும் வாசிக்கக்கூடிய திறமை கன்ஸடிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2மில்லிமீற்றர் நீளமும், 1.5மில்லிமீற்றர் அகலமும் 600 பக்கங்களையும் கொண்ட உலகின் மிகச்சிறிய குர்ஆனும் ரஹீன் அக்பர் கன்ஸடியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள் தோழர்கள் தோழியர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக !

நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர்.

இதற்கெல்லாம் பிரதான காரணமாக விளங்குவது இறை மார்க்கத்தின் பொடு போக்கும் இறைவனது சட்ட வறையறைகளை மீறுவதும் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் பெரும் பான்மையான மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து நடக்காததும், நன்மையை ஏவி தீமையை தடுக்காததுமாகும். குழப்பமான இச்சூழலிருந்து விடுதலை பெற இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவதோடு அவனது கட்டளைகளை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்த்து நடந்து, அசத்திய வழியில் செல்லும் தீயோர்களின் கரங்களைப் பிடித்து சத்திய வழியில் இருத்துவதைத்தவிர முஸ்லிம்களின் ஈடேற்றத்திற்கான வேறு வழிகள் எதுவும் இருக்கவே முடியாது.நவீன காலத்தில் குழப்பங்களின் அச்சாணியாக தீய வார்த்தைகளையும் அழிவின் வாடிக்கையாளார்களையும், செக்ஸ் தொழிலாளர்களையும், விசுவாசிகளிடையே தீமைகள் பரவி அதில் குளிர் காய்வோரையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஏவியதும் விலக்கியதுமாகக் காணப்படுவதை எதிர்த்துப் போராடத்தூண்டுகின்ற தீயோர்களையும் அவர்களின் ஆதரவில் நடந்தேறுகின்ற ஆபாசப் பத்திரிப்கைகளையும், மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற பாலியல் அம்சங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பல்வகை ஆபாச சஞ்சிகைகள் பத்திரிக்கைகளையும் குறிப்பிடலாம்.

ஆய்வின் முடிவில் இவைகள் அனைத்தும் தீமைகளுக்கான விளம்பர சாதனமாகவும் மனித உணர்வுகளைத் தூண்டும் ஊடகங்களாகவும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை செய்யுமாறு ஊக்குவிக்கின்றவைகளாகவுமே இருக்கிறன.

இப்பத்திரிக்கைகளில் பின் வரும் தீமைகள் காணப்படுகிறது ..

1 அதன் அட்டையின் மேற்புறமும் உட்புறமும் ஆபாசப் படங்கள்.

2 அதனுள் நிர்வாண கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள பெண்கள்.

3 பாலியல் உணர்வுகளை தூண்டும் அசிங்கமான வார்த்தைகளும் வெட்கம்

மானம் சூடு சொரணையற்ற வாசகங்கள், சமூக விழுமியங்கள் ஒழுக்கமாண்புகளைச் சிiதைக்கும் சிpங்கார வார்த்தைகள்.

4 அசிங்கமான ஆபாசக் கதைகள் கேடுகெட்ட தீய பாடகிகள் நடிகர்

நடிகைகளின் பயனற்ற செய்திகள் உளறல்கள்.

5 பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து நிர்வாண உலகிற்கு

அவர்களை அழைத்துச் சென்று அவர்களின் உரிமைகளைப் பறித்து பெண் உரிமை

என்ற ஆபாச மாயையில் அவர்களை விழச்செய்து அவர்களின் கௌரவ

ஆடையான ஹிஜாபை (பர்தாவை)க்களையும் கோஷங்கள்.

6 இறை விசுவாசிகளான பெண்களை நிர்வாண வலையில் சி;க்க வைக்கும்பிரதான நோக்கில் நிர்வாண கோலத்துடன் காட்சிpத் தரும் பெண்களைக்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர்  பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்


நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

ப்ரஸ்ஸல்ஸ்,ஜன.30:சமூக களத்தில் தீவிரமாக பணியாற்றிய பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் ஃப்ரான்காய்ஸ் ஹவ்டார்ட் பாலியல் கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளில் உலகமயமாக்கலின் விளைவுகளுக்கெதிராக போராட்டம் நடத்தியதால் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடந்துவரும் வேளையில்தான் இக்குற்றச்சாட்டு எழுந்தது.

புரோகிதர் ஹவ்டார்ட்டின் குற்ற ஒப்புதலை பெல்ஜிய நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. பெல்ஜியத்தில் பாலியல் வன்கொடுமைகளில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஈடுபட்ட செய்தி அந்நாட்டை உலுக்கிய வேளையில் இச்சம்பவம் வெளியானது கத்தோலிக்க சபையை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிர்பந்தத்தால் கத்தோலிக்க சபை 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இரண்டு வயது சிறுவன் வரை பாதிரிகளின் காமவெறிக்கு பலியாகியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் துவங்கியது. அவ்வேளையில்தான் ஹவ்டார்ட் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை பாலியல் வன்கொடுமைச் செய்த நிகழ்வை ஒரு பெண்மணி வெளிக்கொணர்ந்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசுக்கு ஹவ்டார்ட்டை முன்மொழியும் முயற்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் வாபஸ்பெற்றனர்.

உலகமயமாக்கலுக்கெதிராக போராடும் செட்ரா என்ற அமைப்பிலிருந்து ஹவ்டார்ட் ராஜினாமாச் செய்திருந்தார். தற்போது ஹவ்டார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!


பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!


ரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.

2000-ஆம் ஆண்டு சூழ்நிலை புள்ளிவிபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.

ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிக்கின்றனர்.
மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்

மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


மஸ்ஜித்தை மூடமுடியாது: இன்றைய வெலிக்கடை கூட்டத்தில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


ஏ.அப்துல்லாஹ்: 
ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமயில் இன்று காலை 03.08.2012-வெலிக்கடையில்   இடம்பெற்றுள்ளது. அதில் மஸ்ஜிதின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினரும் , ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் நிர்வாகம் , முஸ்லிம் அரசியல் வாதிகள் ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினர் மஸ்ஜித்தை உடனடியாக மூடவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் , இருந்தபோதும் கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த மாதம் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் அவர்களின் எந்த வணக்க வழிபாட்டுக்கும் இடையூறை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. மஸ்ஜித்தை மூடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த பெளத்த குழுவினர் தமது வாதத்தை தொடர்ந்தும் முன்வைத்துள்ளனர் . இதன் போது மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதி போலீஸ் மா அதிபர் எந்த வகையிலும் மக்களுக்கு இடையூறாக இல்லாத மஸ்ஜிதை மூட அனுமதிக்க முடியாது , குறித்த மஸ்ஜித் தொடர்பாக போலீசில் எந்த முறைப்பாடுகளும் இல்லை , மஸ்ஜித் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்துள்துடன் ரமழான் மாதம் முடித்ததும் (எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர்) இது தொடர்பான மேலதிகமான விடயங்கள் பற்றி ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .
நேற்று இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசலுக்கு சென்ற அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிகள் முன்னிலையில் பள்ளி திறக்கப்பட்டு, தராவிஹ் தொழுகைகளும் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டவுடன் மஸ்ஜிதுக்கு முன் கூடிய ஒரு பெளத்த குழுவினர் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பள்ளிசாலை சூழ்ந்துகொண்துள்ளனர் . அவர்கள் இடம்பெற்ற தொழுகைக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன் பள்ளிக்கு வந்தவர்களை எல்லாம் படம் எடுத்துள்ளனர் . அதேவேளை முஸ்லிம் தரப்பில் அதற்கு எவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை . குறித்த சமையம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் , ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் அந்த சமயம் அங்கு சென்றுள்ளனர் .தற்போது பள்ளிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . தொழுகைக்காக தொடர்ந்தும் இயங்கி வருகிறது .
இது தொடர்பாக lankamuslim.org க்கு தகவல் வழங்கிய அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி . நாங்கள் நேற்று போலீஸ் பாதுகாப்பு மத்தியில் மஸ்ஜிதை திறந்து தொழுகை நடாத்தினோம் . அதற்கு ஒரு குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தனர். அங்கு வருபவர்களை எல்லாம் படம் எடுத்துகொண்டும் இருந்தனர் என்று தெரிவித்தார் . குறித்த மஸ்ஜித் சகல சட்ட ஆவங்களையும் கொண்டுள்ளது , அது சட்டப்படியே இயங்குகிறது. வக்பு சபையிலும் பதிவு செய்யப் பட்டு அந்த மஸ்ஜிதின் நிர்வாகிகள் கூட வக்பு சபையில் தங்களை பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளார்கள் . மஸ்ஜித் தொடர்ந்தும் அங்கு இயங்கும் அதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள் . நேன்பின் பின்னரும் எந்த தடைகளும் இன்றி இன்ஷா அல்லாஹ் இயங்கும் . இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்இயதுல் உலமாவின் விசேட குழு ஆராய்ந்து வருகிறது .எந்த சிக்கலும் இன்றி மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
இதன்போது சட்ட நடவடிக்கை என்றால் அத்துமீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா ? என்று கேட்டமைக்கு இல்லை , நீதிமன்றம் செல்லாமல் சட்ட ஆவணங்களை கொண்டு இலகுவாக எமது உரிமைகளை நிலைநாட்ட முடியும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
அதேவேளை சிங்கள பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக இதுவரை ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார் .

Popular Posts

Popular Posts