அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும்
போற்றப்படும் ‘அரிஸ்டாடில்’ (Aristotle) (கி.மு. 384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன்
படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத்துளியில் ஒழிந்திருக்கும்
‘குட்டி மனிதன்’ தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக
வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’தான் மறைந்திருக்கின்றான் என்றும் கூறிவந்தனர்.
17ம் நூற்றாண்டுவரை கருவியல் கோட்பாடு இவ்வாறுதான் இருள்
சூழ்ந்திருந்தது.
அறிவியல் கண்களை திறந்து விட அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித
உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்புமுனையாயின.
அதில் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம்
கருவியல் உலகில் பெரும் புரட்சியையே தோற்றுவித்தது.
கிருத்துவ மதத்தைச் சார்ந்த மருத்துவ
ஆய்வாளர்கள் டாக்டர். கீத்மூர், டாக்டர். மாரீஸ் புகைல், டாக்டர். ஜோ. லே ஸிம்சன் போன்ற சிந்தனையாளர்களை ‘அல்குர்ஆன் அல்லாஹ்வின் அற்புத வேதம்!’ என்று கூற நிர்ப்பந்தித்தது.
