விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.


ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.

நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்.புனித அல்குர்ஆன் இறக்கப்பட்டதிலிருந்து அதாவது கி.பி.750 முதல் உலகில் தொடர்ச்சியாக முஸ்லிம் விஞ்ஞானிகள் தோண்றினர்.அவர்களில் ஜப்பார்,கரிஸ்மா, ராய்ஸ்,முஆத்,அபார், அல்பிரூனி மற்றும் அவீசின்னா(அலி இப்னு ஸீனா) போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.கி.பி 13ம்நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் இரசாயனவியல்,கணிதம்,புவியியல், பௌதீகவியல்,வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.


அல் ஜீப்ரா எனப்படும் அட்சரகணிதத்தை கண்டுபிடித்த பெருமை முஹம்த் பின் கரிஸ்மாவைச்சாரும். மடக்கைகள்,வானியல் மற்றும் அதன் பிரயோகங்கள் போன்ற துறைகளில் புகழ்பூத்த விஞ்ஞானியகத் திகழும் முஹம்மத் பின் ஜப்பார் அல் பத்தானி விளங்குகின்றார். வானியல் நாள் காட்டியை கண்டுபிடித்தார். இது திருத்தப்பட்ட வானியல் நாள் காட்டிப்புத்தகம்(கிதாப் அல்ஜீஸ் அஸ்ஸப்பி) என அறியப்படுகிறது.
பூமி,சூரியனை நீள்வட்டப்பாதையில் ஒரு முறைசுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவை 365நாட்கள் 5 மணித்தியாலங்கள் 24வினாடிகள் எனக்கணக்கிட்டார். இக்கணிப்பீடானது 19ம் நூற்றாண்டில் கணிக்கப்பட்ட அளவீட்டில் இருந்து 2நிமிடங்கள் 24வினாடிகளே வித்தியாசத்தை காட்டியது. மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய முக்கியமான ஒரு ஆய்வையும் அல் பத்தானி மேற்கொண்டார். கலீபா மஹ்மூனின் காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டன. மூஸா பின் ஷாகிரும் அவரது மகன் கரிஸ்மாவும் பூமியின் சுற்றளவு, அகலாங்கு,நெட்டாங்கு என்பவற்றை கணக்கிட்டார்.

மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா

இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா 

இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா


முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் அலி இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது அல் கானூன் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார்.

எமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும். எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள் பற்றிய தெளிவை நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட வேண்டிய பலரது வாழ்க்கை வரலாறுகள் அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸீனா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும். நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை.



இஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச் சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். (ஸல்) அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக்கியமையுமே மருத்துவத்துறையில் எண்ணற்ற முஸ்லிம் மேதைகள் உருவாகி ஆயிரக்கணக்கான ஆக்கங்களை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததெனலாம். பெருமானார் (ஸல்) அவர்களின் நோய் நிவாரணிகள் பற்றிய ஹதீஸ்கள் திப்பு நவவியா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் அறிவியற் பொற்காலமாக கி.பி. 750- 850 கொள்ளப்படுகின்றது. இது அப்பாஸியக் காலப் பிரிவாகும். இக்காலப் பிரிவிலேயே பைத்துல் ஹிக்மா என்னும் மொழிப்பெயர்ப்பு நிலையம் நிறுவப்பட்டு விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் சார்ந்த கிரேக்க நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக மாத்திரம் அல்லாமல் அந்த நூல்களிலுள்ள தவறுகளை ஆராய்ந்து திருத்தியும் பல புதிய மருத்துவ, அறிவியல், கருத்துக்களைப் புகுத்தியும் மருத்துவ, அறிவியல் துறைகளுக்குத் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

மருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.

பத்து வயதாகும்போதே அலி இப்னு ஸீனா அவர்கள் அல்குர்ஆனை கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால் அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸீனா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது குடும்ப நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், கணிதம் போன்றவற்றில் அறிவையும் அரிஸ்டோட்டலின் பௌதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன.

கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது.

அலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிபா'வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன. பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

அலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித் திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் காலமானார்.

இன்று முதல்!


எனது வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி மருதமுனை செய்திகள் அனைத்தையும் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்....

ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா அவர்களால் இனி தொடர்ந்து மருதமுனை ஜனாஸா, அரசியல்,சம்பவங்கள் இன்னும் பல...........



அலிஸ் நியுஸ்எனும் பெயரில் எதிர்பாருங்கள்



பெருவெடிப்புக் கொள்கை

பெருவெடிப்புக் கொள்கையும்  Big Bang Theory  உண்மைப்படுத்தும் இறைவேதமும்



“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30)



அற்புத இறைவேதம்

கி.பி.570ல் அரேபிய தீபகற்பத்தில் அகிலத்தின் அருட்கொடை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இக்காலகட்டத்தில் அன்றைய அரேபியப் பாலை நிலம் அறியாமைப் பேரிருளில் மூழ்கிக் கிடந்தது. அந்த அரபகத்தில் பகுத்தறிவு சிந்தனையும், அறிவாராய்ச்சியும் மருந்துக்கு கூட காணப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் பிறந்த எம்பெருமனார் (ஸல்) அவர்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்த இறை வேதம் என்று ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள். அந்த இறைவேதத்தை ஆய்வு செய்கின்ற ஒவ்வொருவரும் அது அனைத்து மனித பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டு தனித் தன்மையோடு விளங்குவதை அறிந்து கொள்ளலாம். மேலும், அவ்வேதம் அதில் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து அதுபோன்ற ஒன்றை கொண்டு வருமாறு சவால் விடுகின்றது.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேதம் என அறிமுகப்படுத்திய அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதனை விட மிக அழகாகவும், துள்ளியமாகவும் பேசுகின்றது.

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற இந்த அறிவியல் உண்மைகளையும், திருமறைக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டையும் இணைத்து ஒரு கணம் சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் நிச்சயமாக, இது மக்காவில் வாழ்ந்த, எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாக பேசியது கிடையாது. பேசவும் முடியாது. மாறாக, இது முக்காலமும் உணர்ந்தவனான அருளாளன் அழ்ழாஹ்விடமிருந்து வந்த இறைசெய்திதான் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்த அத்தாட்சிகள் நிறைந்த அற்புத வேதமான அல்குர்ஆன் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையான பெருவெடிப்புக் கொள்கை பற்றி என்ன சொல்கின்றது என நோக்குவோம்.
பெருவெடிப்பிற்கு முந்திய பிரபஞ்சத்தின் நிலை




இப்பிரபஞ்சமானது கோள்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற விண்பொருட்கள் தோன்றுவதற்கு முன்னர், அடர்ந்த சூடான வாயுக்களை கொண்டதாக, புகைப் படலமாய் இருந்தது. (The First There Minutes a Modern View of the Origin of the Univere Weinberg PP 94-105) இவ்விஞ்ஞான உண்மையை அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு உறுதி செய்கின்றது.

“பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.” (அல்குர்ஆன் 41:11)
பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theroy)

நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சமானது கிட்டத்தட்ட சுமார் பதினான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர், மனித கண்களுக்குப் புலப்படாத அடர்த்தி குறைந்த வாயுக்களும், அண்டத் துகள்களும் இணைந்து புகைப்படலமாய் (Nebula) காட்சியளித்தது. மேலும், கடினமான பொருட்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு சக்தி திரலாக (Ball of Energy) காணப்பட்டன. இவையனைத்தும் சேர்ந்து இப்பிரபஞ்ச புகையுரு கோளத்தின் மத்தியில் நெருப்புப் பிண்டமாக காட்சியளித்தன.

இப்பொருட்களின் வெப்பநிலையானது மனிதன் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அதிகமாகக் காணப்பட்டது. இப்பொருட்கள் இரசாயன மாற்றத்தாலும், அழுத்தம் மற்றும் வானியல் காரணத்தினாலும் அணுக்கள் சிதைவடைந்து திடீரென வெடித்துச் சிதறி இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாய் பரவியது. புகை மண்டலமாய் காட்சியளித்த வாயுக்கள் மற்றும் அண்டத் துகள்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப்படியாக பெரிதாகி நாம் வாழுகின்ற இப்பூமி மற்றும் சூரியன், சந்திரன், உடுக்கூட்டங்கள் மற்றுமுள்ள கோள்களாகவும் மாறியது என்பதுவே பெருவெடிப்புக் கொள்கையாகும்.

இப்பெருவெடிப்புக் கொள்கையானது 1973ம் ஆண்டு விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டது. இப்பிர பஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய விஞ்ஞான உண்மைகளை முதன் முதலில் வெளியிட்டவர்கள் எட்வின் பி ஹுப்பிள் (Edvin P Hubble), ஜோஜஸ் காமோவ் (Geoges Gomow), ஜோஜஸ‌ லமேட்ரி (Geoges Lamaitro) என்கின்ற விஞ்ஞானிகள் ஆவார்கள். பெருவெடிப்புக் கொள்கை என்கின்ற விஞ்ஞான உண்மை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்படும் வரை பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக பல்வேறு கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நூற்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், அருள்மறைக் குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்ற ‘பெருவெடிப்பு’ என்கின்ற நிகழ்வின் மூலமான உலக உருவாக்கம் பற்றி இந்த நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞான மேதை பேசுவதனை விட மிகத்துள்ளியமாகவும், அழகாகவும் குறிப்பிடுகின்றது. இதனை அற்புத இறைமறை பின்வருமாறு கூறுகின்றது.

“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30)

இப்பெருவெடிப்புக் கொள்கை கண்டுபிடிக்கப்படும் வரை படைப்பாளனான இறைவனை மறுக்கும் நாத்திக சிந்தனையானது இப்பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை (நிரந்தர பிரபஞ்ச திட்டம்) என வாதிட்டு வந்தது. பெருவெடிப்புக் கொள்கை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டதைத் தொடர்ந்து நிரந்தர பிரபஞ்சத்திட்டம் என்கின்ற வாதம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.

மேலும், பிரபஞ்சத்திற்கு தோற்றம் மற்றும் ஆரம்பம் இருந்தது என்பது பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதனை உணர்த்துகின்றது.


படைக்கப்பட்ட பொருள் உண்டு எனில் நிச்சயமாக படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதும் நாத்திக சிந்தனை என்கின்ற போலி வாதத்தை தகர்தெறிந்து, இப்பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்து, ஆட்சி செலுத்துகின்ற அழ்ழாஹ்வின் வல்லமையையும், ஆற்றலையும் பறைசாற்றி நிற்கின்றது. இப்பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி கலிபோனியா பல்கலைக்கழக பேராசிரியர் ‘ஜோர்ஜ் ரபல்’ கூறுகையில், ‘பெருவெடிப்பின் காரணமாக பிரபஞ்சமானது பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதை இன்றைய நவீன விஞ்ஞான உண்மைகள் பறைசாற்றுகின்றன.’ என்று கூறுகின்றார்.

இறுதியாக, இம்மாபெரும் விஞ்ஞான உண்மைகளை அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரேபியப் பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் சுயமாக கூறியதாக இருக்க முடியாது என்பதையும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர்தான் என்பதையும், அருள்மறைக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதையும் இதுபோன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இன்றைய நவீன உலகிற்கும், நாத்திக சித்தாந்தத்திற்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


முஸ்லிம் பெண்களே! ஜாக்கிறதை!


முஸ்லிம் பெண்களே! Smart Friend காமுகர்கள் ஜாக்கிறதை! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!!


மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்னணி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் “ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு” என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரண்டு மாதங்களுக்குள் இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது நாட்டின் சட்டமும் துணை போகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களே! சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும் நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்:வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

காதல்


காதல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?




மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவானது தான் “காதல்”
”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி
”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.
அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதல்’
கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு! இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அலந்துபார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவரக்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்கமருந்தாக உட்கொள்வதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதற்காகவே பல தினங்களை பல சந்தர்ப்பங்களை ஏற்டுத்துகிறார்கள்..
அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது ‘என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால் அவர்களுடைய ”பெரிய மனிதர் இமேஜ் அத்தோடு காலி” என்றாள்.
மேலை நாட்டுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ், “மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மறந்திடாதே!” என்பது தான். கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது தார்மீக மந்திரம்!
பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள். திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல் கர்ப்பம் தரித்தல் கர்ப்பத்தை கலைத்தல் ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மேலை நாட்டினர் .
”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது”
என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
*காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலை பெண்களை பார்க்கிறோம்.'

*கற்பை சூரையாடி குதூகலிக்கும் எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம்.
*ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கதறிஅழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம்.
*மானம் போய்விட்டதே என்று தற்கொலை செய்துக்கொள்ளும் அப்பாவி பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.
*மகள் ஓடிப்போய்விட்டாளே என்று உயிரைமாய்த்து கொள்ளும் பெற்றோரையும் பாரக்கிறோம்.
*கருவை கலைக்கச் சென்று மரணித்து போன பெண்களின் செய்திகளையும் படித்திருக்கிறோம்.
*காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து -சம்பாதிக்கும்-விடயத்தையும் பாரக்கிறோம்.
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் , காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள்.
ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் இதை இஸ்லாம் கண்டிக்கிறது.
உலகம்தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.
”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே”
என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்பு கேள்விக்குரியாகி விடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.
ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.
உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.
அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)
”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)
கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.
”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!” ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31)
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது.
நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
‘அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
‘இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’ (புகாரி)
‘ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
‘விபச்சாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1,முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2,வருமானத்தை அறுத்துவிடும்
3,ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4,நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’
(ஆதாரம் : அத்தபராணி)
பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்)
‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)
‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)
உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.)
சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது. எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது. பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது.
ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது.
திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.
”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)
விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது. அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது.
இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது.
(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)
மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.
”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)
எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலான காதலை இஸ்லாம் திருமணத்திற்கு முன் தடை செய்கிறது என்பதற்கு எந்த ஐயமும் இல்லை .

இறைவனின் அதிசயப் படைப்புகள்!


இறைவனின் அதிசயப் படைப்புகள்!

வான்மறையில் பூமியைப்பற்றி ..

பூமி எவ்வாறு விரிக்கப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் 88: 20)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல்
மாறிவருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிடப் பெரியது.
(அல்குர்ஆன் 40: 57)

இவ்வாறாக திருக்குர்ஆனில் 461 தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தையும் அதிசயங்களையும் அறியலாம்.

இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:

1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால், ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 16. சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் மேற்பரப்பில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கோளம்.2. நீர்கோளம். 3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
எத்தனை பிரயாணங்கள் ?

21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!

ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிஙோம்.

25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய குடும்பத்துக்கு ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பால் வெளி; (புயடயஒல)என்பது ஒன்றா? நூறா ? அதுவே 200 பில்லியன் பால் வெளிகள்; (புயடயஒல க்கள்) உள்ளன. அப்டியானால் உலகில் எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.

அல்லாஹ்வின் கணக்கில்லா இந்த அற்புதப் படைப்புகளின் எண்ணிக்கை பற்றியோ, அவற்றின் அற்புதத் தகலவல்கள் பற்றியோ விஞ்ஞானிகள் கூறுவதைக்கேட்டாலே தலை சுற்றுகிறது. இனியும் என்னன்ன கண்டுபிடிக்கப் போகிறார்களோ ? அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் பற்றி சிந்தித்து அவனைப் புகழ்ந்து அவனுக்கு நாம் நன்றி செலுத்த
வேண்டாமா ? 

to thanks internets
மார்க்க கல்வி

மார்க்க கல்வி



மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் 

அவசியம்!

book1
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
மூளை

மூளை


        மூளை பற்றிய ஆராய்ச்சி

மனிதர்களாக பிறந்த யாவரும் `தான்’ என்று சொன்னாலே அது கண்டிப்பாக ஆன்மாவுடன், மூளையுடன், தனிமனிதனுடன் தொடர்புடையதுதான். இப்பொழுது திரைப்படங்களில் மனநிலை சம்பந்தப்பட்ட கதைகளை பற்றித்தான் பார்க்கிறோம். `பன்மடங்கு ஆளுமை முறையின்மை’, `அம்னீஷியா’  எனப்படும் மறதி நோய் இப்படிப் பலவகைகளில் ஏதோ காரண காரணியங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. இதுமட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பற்பல புதுப்புது தகவல்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். `தான்’ என்பதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. இதனைப் பற்றி டார்மூத் பல்கலைக் கழக மனோதத்துவ விஞ்ஞானி டாட் ஹெதர்டன் பல ஆண்டுகளாக சக அறிவியல் அறிஞர்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தான் என்பது எப்படி மூளையுடன் சிந்தனையுடன் தொடர்புடையது என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர். எப்படி தான் என்பது மூளையிலிருந்து வெளிப்படுகிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் இதனைப் பற்றி தன்னுடைய “மனோதத்துவக் கோட்பாடுகள்”  என்ற புத்தகத்தில் இதனுடைய விளக்கங்களை எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் சில சம்பவங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் தான்  என்ற உணர்விற்கும் சுய நினைவிற்கும் வேறுபாடுகளை கண்டறிந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தின் மூலம் பினியஸ் கேஜ் என்பவருக்கு மூளையில் ‘தான’  பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். ரெயில்வே கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த இவருக்கு டைனமைட் வெடித்ததன் காரணமாக இரும்பு துகள்கள் காற்றின் மூலமாக அவரது தலையில் பலமாக ஊடுருவியது. ஆனால் அதிசயமாக உயிர் தப்பினார். இந்த விபத்திற்கு பிறகு கேஜ் உடைய நண்பர்கள் அவரது தன்மையில், நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டனர்.
இதற்கு முன் கேஜ் ஒரு திறமையான ஊழியராகவும், திறமைமிக்க தொழில் முனைவோராகவும் கண்டனர். ஆனால் விபத்திற்கு பின் மிகவும் உணர்ச்சியற்றவராகவும், எதிலுமே விருப்பம் இல்லாதவராகவும், விபத்திற்கு முன் எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களிடம் அன்பு, மரியாதை செலுத்தினாரோ அந்த அளவிற்கு அவரிடம் குணங்கள் காணப்படவே இல்லை யாம். மாறாக இக்குணங்கள் குறைபாடுள்ளவராக இருந்தாராம். அவருடைய நண்பர்கள் கூறுகையில், “பழைய கேஜ் நம்மிடம் இல்லை” என்றனராம்.
இதிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால், சுயநினைவிழப்பது  தான்  என்ற நிலை இழப்பது. இவை இரண்டும் வெவ்வேறானவை. சுயநினைவிழக்காமலேயே நல்ல திடகாத்திரமானவன் தன்னுடைய நிலையை இழக்கலாம். மூளை பாதிப்பிலிருந்து தெரிவது என்னவென்றால் தன்னிலை என்ற அமைப்பு சிக்கலான வகையிலேயே அமைந்திருக்கிறது. சான்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின்  ஸ்டான் பி. க்லென் தன்னுடைய சக நிபுணர்களுடன் 2002ல் நடந்த மற்றொரு சம்பவத்தின் ஆய்வில் அம்னீஷியா  என்ற மூளையில் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். 75 வயதுடைய ஒரு வருக்கு மாரடைப்பினால் மூளையில் அம்னீஷியா என்ற பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இவர் தன்னுடைய பழைய நினைவுகள் மற்றும் கடந்த காலத்தில் தான் செய்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் கடந்தகால சம்பவங்கள் அனைத்தையும் மறந்தார்.  ஆனால் மற்ற இயக்கங்களை திரும்பப் பெற்றாலும் சுய நினைவை இழக்கவில்லை. நினைவகத்தில் உள்ள கடந்த கால நினைவுகள் எல்லாம் கம்ப்யூட்டர்  விவரங்கள் அழிந்தது போல் ஆகிவிட்டது. சமீப காலமாக விஞ்ஞானிகள் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் பல அரிய தகவல்களை அளித்து வருகின்றனர்.
நம்முடைய நிலைமையைப் பற்றி அறிவது, நம்முடைய ஒவ்வொரு அங்கங்களின் அசைவு மற்றும் நடவடிக்கைகள் எப்படி மூளையிலிருந்து கட்டளையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்ற விவரங்களை அளிக்கின்றன. லண்டனிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் எவ்வாறு நாம் நம் உடலைப் பற்றி அதனுடைய உணர்வுகளை அறிய முடிகிறது என்று கண்டறிந்துள்ளனர். அப்பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா ஜெய்னி பிளாக்மோர் கூறுகையில், “இது மிகவும் அடிப்படையான விஷயம் என்றும், தன்னிலையின் முதல் கட்டமாகும்” என்கிறார். நம்முடைய மூளை ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு பணியை செய்வதற்கு இரண்டு சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஒன்று குறிப்பிட்ட அப்பணியை செய்வதற்கு மூளையிலுள்ள எந்தவொரு குறிப்பிட்ட பகுதி கட்டுப்படுத்துகிறதோ அல்லது கண்காணிக்கிறதோ அப்பகுதிக்கும், மற்றொன்று பணியை செய்யும் அங்கம் அல்லது உடலின் அப்பகுதிக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. பிளாக்மோர் கூறுகையில், “இது மின்னஞ்சலில் ஒரே தகவலை இரண்டு நபர்களுக்கு அனுப்புவது போன்றதாகும். அதாவது நகல் அஞ்சல் மற்றொருவருக்கு அனுப்புவது போன்றதாகும்.” என்கிறார். உதாரணமாக நாம் டி.வி யை ஆன் செய்கிறோம் என்றால் ஒரு சமிக்ஞை, கைக்கும் மற்றொன்று மூளையில் இப்பணியை செய்வதற்காக கண்காணிக்கும் பகுதிக்கும் செல்கிறது. மனிதன் தன்னைப்பற்றி அறிவதற்கு அல்லது தன் உணர்ச்சிகளை அறிவதற்கு நான் யார்? நாம் என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்? என்ன செயலை செய்கிறோம்? இப்படி சுய நிலையை அறிவதற்கு மூளையின் ஒரு பகுதி திட்டமிடுகிறது, கண்காணிக்கிறது, செயல்படுத்துகிறது. இது மனிதன் நான் யார்? என்பதை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் செயல்படுகிறது. பழைய கடந்த கால நடவடிக்கைகளை, சம்பவங்களை, வரலாறுகளை மறுபடியும் அசைபோடுவதற்கு உதவி புரிகிறது.
 நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அரிய கண்டுபிடிப்புகள் மூலம் மூளையின் செயல்பாடுகள், மூளையின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் மனிதனிடம் எந்த ஒரு குறை ஏற்படுகிறது. எதனால் பழைய நினைவுகளை மறக்கிறான். அப்பகுதியை மறுபடியும் சீரமைத்தால் குணமாகிவிடுமா? எப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் தான் சுய உணர்வை இழக்கின்றான். அதாவது தன்னையே மறந்துவிடுவது. அறிவியலின் அதிவேக வளர்ச்சியின் உதவியால் மட்டுமே மனநிலைக் கோளாறு, மூளையில் ஏற்படும் கோளாறுகள் பிரிக்கப்பட்டு இன்னென்ன மனநிலைக் குறைபாடுகள் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் ஏற்படுகிறது என்றெல்லாம் கண்டறியப்பட்டு அதற்கேற்ற சிகிச்சைகள் மேற்கொள்ள முடிகிறது.
உதாரணமாக இன்றைய காலத்தில் மின்சாரம் அதிர்ச்சியூட்டும் சிகிச்சை முறை  போன்றவையாகும். இன்னும் அதிநவீன முன்னேற்றத்தால் மூளையில் ஏற்படும் பலவித குறைபாடுகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஊசி, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்கிற அளவிற்கு எளிதாகிவிடும் என்பது உறுதி!
எம்.ஜே. எம்.இக்பால், துபாய்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இஸ்லாத்தை தழுவினார்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.


இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.


இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.


இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.
   

ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.


இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.


கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.


பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.


இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.



அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.


தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.


தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...


சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்
அப்பாவைக் கற்பழித்த மகள்கள்  (பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?)

அப்பாவைக் கற்பழித்த மகள்கள் (பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?)


கிறிஸ்தவ சகோதரர்களே பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?
  
அப்பாவைக் கற்பழித்த மகள்கள் 

ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய
...
31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்

பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!



பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!


இஸ்லாத்தின் சட்டங்களைப் பற்றிய பயம் மேலிட்டதால் சில பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் ஷரியாசட்டங்களுக்கு பிரிட்டிஷில் இடமில்லை என்ற கோஷத்தை எழுப்பினர். 1982ல் இருந்து இயங்கி வரும் ஷரிய கோர்ட்டுகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் எற்படும் சிவில பிரச்னைகளை தாங்களாகவே மார்க்க அறிஞர்களின் துணைகொண்டு தீர்த்துக் கொள்ள ஏற்படுத்தப் பட்டது. இதைக் கண்டு பொறுக்காத ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்.

“Hey..hey..ho..ho..sharia must go”
“We want womans rights”
“One equal rights for all”
“Long live equality”

இதிலிருந்து என்ன தெரிகிறது? போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாம் பெண்களை கொடுமைபடுத்தவதாகவும் இவர்கள் கோஷமிட தயங்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக ஆண்களை விட பெண்களே இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். படித்த பெண்களிலிருந்து பாமர பெண்கள் வரை குர்ஆனை தங்களது வாழ்வியலாக வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை . காட்டுகின்றனர் 






சில ஆண்டுகளிலேயே ஷரியா கோர்ட்டுகளை நாடுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. மேலும் விசேஷமாக முஸ்லிம் அல்லாதவர்களும் ஷரியா கோர்ட்டை தற்போது நாடுகிறார்களாம்.

இது பற்றிய பிபிசி யின் தமிழ்ப் பிரிவு அளித்த செய்தியை இனி பார்ப்போம்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகராறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.

பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.

1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.

ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.

இதேவேளை, பிரிட்டனில் ஷரியா நடைமுறைகள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறும் சில பெண்ணுரிமை அமைப்புகள் அந்த நடைமுறைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது




முஹம்மது நபியை குறித்து இயேசு

முஹம்மது நபியை குறித்து இயேசு

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!



அங்காரா:இஸ்லாத்தின்
இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச்
செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில்
கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும்
இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப்
பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த
நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும்
கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது
என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய்
செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய
கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள
இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான
அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள
கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ்
கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த
நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி
தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு
செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்

ஒரு கால்பந்து வீரரின் சரிதை

குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.



யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?


தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.


யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.



Yaya Toure (Image courtesy - goal.com)

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?


இதற்கு அவர் கூறிய காரணம்,

"நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

MASHAALLAH

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.

EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Not for me! Yaya Toure turns down man-of-the-match champagne on religious grounds - Dailymail, 6th May 2012.link
2. Soccer and religion meet on the pitch, where the English Premier League considers a change - Yahoo sports, 7th May 2012. link
3. “I Don’t Drink Because I’m Muslim” - On Islam. 7th May 2012. link
4. Yaya toure - wikipedia. link.
5. African footballer of the year - wikipedia. link
இயேசு ஒரு முஸ்லிம்தான்

இயேசு ஒரு முஸ்லிம்தான்


இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்: அமெரிக்க    பேராசிரியர்

 இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இயேசு ஒரு முஸ்லிம் ? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது .

மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.

“இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார்.

பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது.



தேனீக்கள்

தேனீக்கள்


தேனீக்கள்



                      
தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!


பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

Post image for பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,
ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்…
அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!

முத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????
நீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா??
உங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து???
உங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா??
சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா??
நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??
உங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா??
உங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா??
அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?
எது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..
இதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..
1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்…
2)பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..
நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..
3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய‌மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.
ந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..
உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்…
4)உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிர‌து ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..
1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.
2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்
3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்
உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.
க‌ணவ‌னுக்காக‌ அழ‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்??.
நீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.
இல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.
த‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.
இஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.
நீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள்.. ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விட‌ய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??
உங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..
“உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்”…
இந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்…
இது ஆண்களுக்கும் பொருந்தும்.
by-பெண்சாட்சி & Nasreen Fathima

Popular Posts

Popular Posts