
Home » Archive for 2011


மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை செய்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?
இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.
தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.
கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.
“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.
“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.
ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.
இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.
மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:
”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)
தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.
இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.
“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.
இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.
ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.
“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.
எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.
நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)
ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.
ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.
“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.
நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)
இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.
ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)
ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.
அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.
“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.
இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.
“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)
ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.
“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)
தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.
ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
நன்றி-இணையம்

இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள்
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.
இன்றைய உலகில் நாம்பார்க்கிறோம்.ஆசிரியருக்கு மாணவனும்,பெரியவர்களுக்குசிறியவர்களும்,பணக்காரனுக்கு ஏழையும்,அரசியல்வாதிகளுக்கு மக்களும் எழுந்து நின்று மரியாதைசெய்கிறார்கள்.இப்படி எழுந்து நின்று மரியாதைசெய்பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கின்றனர்.ஆனால் எல்லாவிடயத்திறகும்;வழிகாட்டக்கூடிய இஸ்லாம் இந்த விடயத்தை முற்றுமுலுதாக தடை செய்கின்றது.ஏனென்றால் இந்தவிடயத்தின் மூலம் ஏற்றத் தாழ்வுகளும்,பகைமைகளும்மனிதர்கள் மத்தியில் உண்டாகும் என்பதற்க்காகவேஇதனை இஸ்லாம் தடை செய்கின்றது.மரியாதைக்காகஎழுந்து நிற்பது ஒரு வணக்கம்தான்.ஆனாலும் அந்த நிற்றல்என்ற வணக்கம் எல்லாவற்றையும் படைத்தஅல்லாஹ_க்கு மாத்திறம்தான் செய்ய வேண்டும்அவனைத்தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இந்தவணக்கத்தை செய்யக்கூடாது.
அல்லாஹ_த்தஆலா தனது திருமரைக் குர்ஆனில் கூறும்போது கூட கியாம் (நிற்றல்) என்ற பொருள் தரக்கூடியஅறபுச் சொல்லைத்தான் பயன்; படுத்துகிறான்.
“அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள்”(அல்குர்ஆன்.2:238)
மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக்குறிப்பதற்கு கியாமுல்லைல்(இரவில் நிற்றல்) என்றவார்த்தையைத் தான் அல்லாஹ் பயன் படுத்துகிறான்.
“இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக” (அல்குர்ஆன்73:02)
எனவே மரியாதைக்காக நிற்பது என்பது அல்லாஹ்விற்குமாத்திரம் தான் என்பது இந்த குர்ஆன் வசனங்களின் மூலம்தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.அப்படியே ஒரு புரம்முஸ்லிம் சமுதாயத்தை உற்று நோக்கினால் மார்கத்துக்குமுரனான இந்த விடயத்தை செய்துகொண்டிருக்கின்றார்கள்.இன்றைக்கு இருக்கக்கூடியமுஸ்லிம் பாடசாலைகளில் இந்த அனாச்சாரம் அதிகமாகநடப்பதை காணலாம்.வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால்எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்றுமாணவர்களுக்கு முஸ்லிமான ஆசிரியர்கள்கட்டளையிடுகிறார்கள்.இந்தச் செயலை நபி(ஸல்)அவர்கள் வெறுத்தது இவர்களுக்குத்தெரியவில்லையா?அல்லது தெறிந்தும் இவர்களுக்குமரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவேண்டிஇப்படிச் செய்கிறார்களா?
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தமக்காக எழுந்துநிற்பதைக்கூட வெறுத்திறுக்கிறார்கள்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள்நோய்வாய்ப்பட்டார்கள்.அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்களும்அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள்திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக்கண்டார்கள்.சைகை மூலம் எங்களை உட்காரச்சொன்னார்கள்.நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப்பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்பாரசீக,ரோமபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள்நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே. இனிமேல்அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள்இமாம்களைப் பின்பற்றித் தொழுங்கள்.என்றுநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:(முஸ்லிம்,புகாரி.689,732,805,688 )
அல்லாஹ_த்தஆலா தனது திருமரைக் குர்ஆனில் கூறும்போது கூட கியாம் (நிற்றல்) என்ற பொருள் தரக்கூடியஅறபுச் சொல்லைத்தான் பயன்; படுத்துகிறான்.
“அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள்”(அல்குர்ஆன்.2:238)
மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக்குறிப்பதற்கு கியாமுல்லைல்(இரவில் நிற்றல்) என்றவார்த்தையைத் தான் அல்லாஹ் பயன் படுத்துகிறான்.
“இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக” (அல்குர்ஆன்73:02)
எனவே மரியாதைக்காக நிற்பது என்பது அல்லாஹ்விற்குமாத்திரம் தான் என்பது இந்த குர்ஆன் வசனங்களின் மூலம்தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.அப்படியே ஒரு புரம்முஸ்லிம் சமுதாயத்தை உற்று நோக்கினால் மார்கத்துக்குமுரனான இந்த விடயத்தை செய்துகொண்டிருக்கின்றார்கள்.இன்றைக்கு இருக்கக்கூடியமுஸ்லிம் பாடசாலைகளில் இந்த அனாச்சாரம் அதிகமாகநடப்பதை காணலாம்.வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால்எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்றுமாணவர்களுக்கு முஸ்லிமான ஆசிரியர்கள்கட்டளையிடுகிறார்கள்.இந்தச் செயலை நபி(ஸல்)அவர்கள் வெறுத்தது இவர்களுக்குத்தெரியவில்லையா?அல்லது தெறிந்தும் இவர்களுக்குமரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவேண்டிஇப்படிச் செய்கிறார்களா?
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தமக்காக எழுந்துநிற்பதைக்கூட வெறுத்திறுக்கிறார்கள்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள்நோய்வாய்ப்பட்டார்கள்.அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்களும்அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள்திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக்கண்டார்கள்.சைகை மூலம் எங்களை உட்காரச்சொன்னார்கள்.நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப்பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்பாரசீக,ரோமபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள்நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே. இனிமேல்அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள்இமாம்களைப் பின்பற்றித் தொழுங்கள்.என்றுநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:(முஸ்லிம்,புகாரி.689,732,805,688 )

யாருக்கேனும் நின்றுதொழுவதற்குமுடியாவிட்டால்இருந்து தொழுவதற்குமார்க்கத்தில் அனுமதிஇருக்கின்றது.அதனால்தான் நபியவர்கள்உட்கார்ந்துதொழவைத்தார்கள்.ஆனால் ஸகாபாக்களுக்கு நின்றுதொழுவதற்கு சக்தி பெற்றிருந்தார்கள்.அதனால்தான்அவர்கள் நின்று தொழுதார்கள்.அப்படி இருந்தும்கூடநபியவர்கள் அதனை தடை செய்கிறார்கள்.பாரசீகரோமபுரி மன்னர்கள் இருந்து கொண்டிருக்கும் போது மக்கள்அந்த மன்னர்களுக்கு மரியாதை செய்வதற்காக வேண்டிஎழுந்து நிற்பார்கள்அது போன்று இந்த விடயம்ஆகிவிடக்கூடாது என்பதற்காக வேண்டித்தான் நபியவர்கள்இதனைதடை செய்தார்கள்.இன்னும்சொல்லப்போனால.அப்படியானால் இந்த ஹதீஸ்மரியாதைக்காக எழுந்து நிற்பதைதடுக்கின்றது.என்பதைநாம் விளங்கிக்கொள்ளலாம்.இன்னுமொரு ஹதீஸைப் பார்ப்போம்
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்குவிறுப்பமான ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள்எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காகஎழுந்து நிற்க மாட்டோம்.ஏனென்றால் எழுந்து நிற்பதைஅவர்கள் கடுமையாகவெருப்பார்கள் என்பதே இதற்குக்காரணம்.இதனை அனஸ்(ரழி)அறிவிக்கிறார்கள். ஆதாரம்;(அஹ்மது.12068,11895, திர்மிதி:-2678)
இந்த செய்தியின் மூலம் ஸகாபாக்கள் அமர்ந்துகொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வந்தால் கூடஎழுந்து நிற்க மாட்டார்கள்.ஏன் இந்த விடயம் நபி(ஸல்)அவர்களுக்குப் பிடிக்காது என்பதற்காகத்தான். ஆனால் இந்தஆசிரியர்கள் தங்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்று கூறிகிறார்களே இவர்கள் தான்முஸ்லிமான ஆசிரியர்களா?அல்லது மாற்றுமதத்தவர்களின் செயல்களை பின்பற்றக்கூடியவர்களா?இஸ்லாத்தை பின்பற்றக் கூடிய ஆசிரியர்கள்இதனை சிந்திக்க வேண்டும்..அது மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் எழுந்து நிற்கக் கூடாது.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் 5வதுஅதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரழி). அவர் வெளியேவந்த போது அவரைக் கண்டஅபதுல்லாஹ் பின் சுபைர்அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர்.உடனே முஆவியா(ரழி) அவர்கள் அவ்விருவருக்கும்அமருங்கள் என்றார்கள். பின்பு கூறினார்கள் தனக்காகமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விறும்புகிறாரோஅவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக்கொள்கிறார். என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதை நான்கேட்டுள்ளேன்.என்று முஆவியா (ரழி)சொன்னார்கள்.ஆதாரம்:-(அபூதாவுத் 4552)
எனவே என் அன்பின் சகோதர,சகேதரிகளே! இப்படிப் பட்டசில செய்திகளிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவெனில் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுக்குமரியாதைக்காக எழுந்து நிற்கக் கூடாது என்பதை நாம்விளங்கிக் கொள்கிறோம். எனவே இந்த அனாச்சாரமானசெயல்களிலிருந்து எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!.
ஆக்கம் :பாரிஸ்
Subscribe to:
Comments (Atom)
